search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு போலீஸ் அதிகாரி"

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி இன்று பத்திரமாக வீடு திரும்பினார். #Kashmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்தவர் முடாசீர் அகமது. இவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி நேற்று இரவு பத்திரமாக வீடு திரும்பினார் என காஷ்மீர் எஸ் பி பானி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், போலீஸ் அதிகாரியை கடத்திய பயங்கரவாதிகளே அவரை விடுவித்து விட்டனர். அவரிடம் விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார். #kashmir
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். #MilitantsAttack #JKfiring #SPOshot

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தின் கத்தோ ஹலன் பகுதியில் இன்று மாலை சிறப்பு போலீஸ் அதிகாரி ரவீஸ் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்சிபோரா காவல் நிலையம் மீது சில பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #MilitantsAttack #JKfiring #SPOshot
    ×